யாழில் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முண்டகப்படுள்ளது.
இதற்கமைய குறித்த போராட்டம் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
அத்துடன்இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் உட விடுதலை செய்!,
கொரோனா திறைமறைவில் எங்களை வதைக்கதே,
மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு,
உணவுப் பொருட்கள் – எரிபொருட்களின் விலையை உடனே குறை!,
அவ்வாறு வசாயிகள் – மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காண்!, மற்றும் நிறுத்து நிறுத்து விலை உயர்வை நிறுத்து உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு விரைந்த யாழ் காவல்துறையினர் போராட்டத்தை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியதையடுத்து குறித்த போராட்டம் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



