மணிப்பூரில் இன்றைய தினம் காலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நிலநடுக்கமானது உணரப்பட்டது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் எந்த விதமான சேதமும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.