சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது.

0

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றமை தொடர்பான குற்றச்சாட்டில் 13 உழவு வண்டியுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய வாழைச்சேனை பகுதியில் 11 உழவு வண்டிகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரியாலை பிரதேசத்திலும் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 2 நபர் உழவு வண்டி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அக்குரஸ்ஸை பகுதியில் 2 உழவு வண்டிகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply