தீராத கடன்கள் எல்லாம் தீர்த்து பண வரவு அதிக்க செய்யும் அற்புத நாள் பற்றி தெரியுமா?

0

இது குரு பூர்ணிமா என்றும் வழங்கப்படுகிறது . மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவை ( ஆசிரியர் ) வழிபடுவதுடன் தட்சிணா மூர்த்தி , கிருஷ்ணன் , வேதவியாசர் , ஆதிசங்கரர் , இராமானுஜர் , போன்றோரையும் வழிபடுகின்றனர் . ஹயக்கிரீவர் அவதார தினமும் இந்நாளே ஆகும் . கல்விச் செல்வம் வேண்டி ஹயக்கிரீவர் வழிபாடும் ஆடிப்பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படுகிறது .

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடிப் பௌர்ணமி அன்று ஆடித்தபசு நடைபெறுகிறது . உமையம்மை கோமதி என்ற திருநாமத்துடன் சங்கர நாராயணர் தரிசனம் வேண்டி சிவனை நோக்கி ஒற்றைக் காலில் இத்தலத்தில் தவமிருந்தாள் . கோமதி அம்மையின் வேண்டுகோளுக்கு இணங்க பொதிகை புன்னை வனத்தில் இறைவன் சங்கர நாராயணராக ஆடிப்பௌர்ணமியில் காட்சி அளித்தார் . இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் விதமாக ஆடித் தபசு விழா இன்றும் கொண்டாடப்படுகிறது .

அதேபோல் , ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம் . எனவே ஆடி பௌர்ணமி நாளில் , ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும் ; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள் . கல்வியும் ஞானமும் கிடைத்து , சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம் !

ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து , கருப்புப் பட்டாடை , நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை , கருஊமத்தம் பூமாலை அணிவித்து , மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும் .

வரும் 15.8.2019 அன்று ஆடி பௌர்ணமி. ஆவணி அவிட்டதோடு வரும் இந்த பௌர்ணமி விசேஷமானது. இந்த நன்னாளில் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தீராத கடன்கள் தீரும். பண வரவு அதிகரிக்கும். உறவு மேம்படும்.- Source: timestamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply