முதல் முறை காட்சி தந்த அத்தி வரதர்…!

0

பல நூறு ஆண்டுகளாக அத்தி வரதர், அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளிவந்து காட்சி தந்து வருவதாக கூறிவந்தாலும், 1854-ம் ஆண்டு காட்சி தந்தது முதல்தான் முறையான பதிவு காணப்படுகிறது.

அதிலும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வந்திருக்கிறது. 18.6.1854-ல் காட்சி தந்த அத்தி வரதர், அதன்பிறகு 38 ஆண்டுகளுக்குப் பின்னர் 13.6.1892-ல் அருள்பாலித்திருக்கிறார்.

பின்னர் 45 ஆண்டுகள் கழித்து 12.7.1937-ம் ஆண்டு காட்சி தந்துள்ளார். தொடர்ந்து 42 ஆண்டுகளுக்குப் பிறகு 2.7.1979-ல் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளார். தற்போது சரியாக 40 ஆண்டுகளுக்குப் பின் 1.7.2019 முதல் காட்சி தந்து வருகிறார். இனி அத்தி வரதரை, 2059-ம் ஆண்டில்தான் தரிசிக்க முடியும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply