எவரையும் காப்பியடிக்காத மகரம் ராசிக்காரர்களின் ரகசியங்கள்..!

0

12 ராசிக்காரர்களில், ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறு விதமான குணங்கள் இருக்கும். ஆகவே, 12 ராசிக்காரர்களின் குணநலன்கள் பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். மகரம் ராசிக்காரர்களின் குணங்கள் பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.

மகரம் ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலம், பலவீனம் இரண்டுமே பிடிவாதம்தான். எதையும் முடிக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால், எந்தவித சமரசமும் இல்லாமல் வெற்றி கிடைக்கும்வரை போராடி முடிப்பார்கள். தன்முனைப்பு மிகவும் அதிகமுள்ளவர்கள். தான்மட்டும் நன்றாக இருந்தால் போதுமென்று நினைக்க மாட்டார்கள். தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவைக்க முற்படுவார்கள். ஆனால், உதவிக்குத் தகுதியானவர்களைச் சரியாகத் தேர்வு செய்து உதவுவார்கள்.

மகர ராசிக்காரர்கள் உழைப்புக்கு அஞ்சாதவர்கள். வேலை பார்க்கும் நிறுவனத்தில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அவற்றை இழுத்துப்போட்டு செய்து நற்பெயரெடுப்பார்கள். சிலருக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கும். சிலருக்குக் கோயிலில் இருக்கப் பிடிக்கும். சிலருக்குக் கேளிக்கை சுற்றுலாக்கள் பிடிக்கும். ஆனால், இந்த மகர ராசிக்காரர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருக்கவே பிடிக்கும். கடைக்காரர்களென்றால் இவர்களின் கடையிலேயே அதிக நேரத்தைச் செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

மகர ராசிக்காரர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்களை மாற்றிக்கொள்ளாதவர்கள். ஒருசெயலில் முடிவெடுக்க வேண்டுமென்றால் எல்லோரிடமும் அபிப்பிராயங்கள் கேட்டுக்கொள்வார்கள். ஆனால், முடிவில் அவர்கள் நினைத்து வைத்திருந்த முடிவை மட்டுமே செயல்படுத்துவார்கள். மற்றவர்கள் செய்யும் செயலைக் காப்பியடிக்க மாட்டார்கள். தனித்துவமான காரியங்களில் மட்டுமே ஈடுபடுவார்கள். – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply