நினைத்தது நடக்க தினமும் வழிபடும் போது சொல்ல வேண்டிய நரசிம்மர் துதிப்பாடல்..!

0

நரசிம்மரை வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் யாவும் விரைந்து நிறைவேறுகிறது. இந்த நரசிம்மர் பாடலை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எண்ணங்கள் ஈடேறும்.

நினைத்ததை நிறைவேற்றும் நரசிம்மர் துதிப்பாடல்
தேவர்கள் தேவே போற்றி! செஞ்சடை ஈசா போற்றி!
பூவில்மா சொரூபா போற்றி! புகழ்மறைப் பொருளே போற்றி!
மாவிரு மாவந் தேத்தும் மலர்கழல் உடையாய் போற்றி!

சேவிழி மூன்றாய் போற்றி! திகம்பரப் பிரமா போற்றி!
சரணம என்றடைந்த பேர்க்குச் சாந்தகம் ஆனாய் போற்றி!
முரனுடை அரக்கர்க்கு எல்லாம் மூரக்கம தானாய் போற்றி!
கரணங்கள் தொண்ணூற் றாறும் கலந்தினி திருந்தாய் போற்றி!
நரணனே போற்றி நாரசிங்கனே சரணம் போற்றி!- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply