சீரடி சாய் பாபா நடத்தியுள்ள அற்புத பலன்கள்!!

0

சீரடியின் துறவியான சாய் பாபா தன் பக்தர்களின் உள்ளங்களை ஆண்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய பக்தர்களாக இல்லாதவர்கள் கூட அவருடைய வாழ்க்கை மற்றும் குணாதிசயங்களைப் பற்றி கேள்விப்படும் போது பிரமிப்பை அடைவார்கள் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. சிலர் அவரை கடவுளாக வணங்குகின்றனர். இன்னும் சிலரோ அவரை, துன்பங்களில் இருந்து மனித இனத்தை காக்க கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய துறவியாக கருதுகின்றனர். சாய் பாபாவின் வாழ்க்கையாகட்டும் அல்லது அவர் ஆற்றிய அற்புதங்கள் ஆகட்டும், அவரைப் பற்றிய அனைத்துமே அவரை நம்பும் மக்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தாமல் இருக்காது.

சாய் பாபாவின் பக்தையான ஒரு பெண் தன் பார்வையை இழந்தார். மருத்துவர்கள் அனைவரும் கை விரித்து விட்டனர். சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சென்றாலும் கூட பிரயோஜனமில்லை என்றும் கூறி விட்டனர். அந்த பெண்ணின் கணவன் அவரை சீரடிக்கு அழைத்து வந்து, அவரை பாபாவின் சமாதிக்கு அன்றாடம் அழைத்து வந்தார். தனக்கு குணமானால் எம்ப்ராய்டரி போடப்பட்ட சால்வை ஒன்றை பாபாவிற்கு காணிக்கையாக தருவதாக அப்பெண் வாக்களித்தார். ஒரு வருடத்திற்குள் அந்த பெண்ணிற்கு பார்வை கிடைத்து விட்டது என கூறப்படுகிறது. அதற்கு நன்றிக்கடனாக தன் வாக்கை அவர் நிறைவேற்றியுள்ளார்.

டாக்டர் கே.பி.கவன்கர் தன் குழந்தை பருவம் முதலாகவே மிகப்பெரிய சாய் பாபா பக்தராவார். பாபாவின் பக்தர்கள் பாபாவின் புகைப்படத்தை கோரியது பற்றி அவர் அவருடைய புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த தூண்டலுக்கு பின்னர், தன் காலடிகளை மட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ள பாபா சம்மதித்தார். ஆனால் அவரின் அனுமதியை சாதகமாக எடுத்துக் கொண்டவர்கள் அவருடைய முழுப்படத்தையும் எடுத்து விட்டனர். ஆனால் அந்த ஃபிலிமை கழுவிய போது, சாய் பாபாவின் உருவத்திற்கு பதிலாக புகைப்படமாக எடுத்தவரின் சொந்த குருவின் படமே இருந்துள்ளது. சாய் பாபாவின் பார்வையில் அனைத்து படைப்புகளுமே ஒன்றாகவே இருந்தது. ஜாதி, சமயம் மற்றும் மதத்தின் பேரில் அவர் யாரையும் பிரித்து பார்த்ததில்லை. அவரை பொறுத்த வரை, விலங்குகள் கூட மனிதர்களின் அளவிலான மதிப்பைப் பெற்றிருந்தது. பக்தர்களிடம் இருந்து பிரசாதங்களைப் பெறுவதற்காக அவர் அடிக்கடி விலங்குகளின் வடிவில் காட்சி தருவார்.

ஒரு முறை தாமியா என்பவர் தான் தங்கியிருந்த இடத்திற்கு சாய் பாபாவை விருந்திற்கு அழைத்தார். ஆனால் தன்னால் வர இயலாது என்றும், அவருக்கு பதிலாக பாலா படேலை அனுப்பி வைப்பதாக பாபா கூறினார். பாலா படேல் கீழ் ஜாதியை சேர்ந்தவர். அதனை காரணமாக காட்டி, விருந்தாளியான அவரை அவமரியாதையாகவோ இழிவுபடுத்தவும் விதமாகவோ நடத்தக்கூடாது என பாபா எச்சரித்தார். ‘உங்களுக்கு தொலைவாக அவரை அமர வைத்து, அவரை பார்த்து கூச்சலிடுவதோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது’, என தெளிவாக கூறினார். விருந்தை தயார் செய்த தாமியா பாபாவிற்காக தட்டுக்களை எடுத்து வைத்தார். ‘வாருங்கள் சாய்’ என அழைத்தார். உடனே எங்கிருந்தோ வந்த ஒரு கருப்பு நாய் அந்த தட்டில் இருந்து சாப்பிட்டது. அதன் பிறகு, தாமியாவும், பாலாவும் ஒன்றாக அமர்ந்து உணவை அருந்தினார்கள். சாய் பாபாவிற்கு சடங்குகளின் மீது நம்பிக்கை கிடையாது. தூய்மையான பக்தி மற்றும் நம்பிக்கையால் மட்டுமே அவரை வெல்ல முடியும். சாய் பாபாவின் அற்புதங்கள் பற்றி மேலும் அறிந்தால் அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply