இழந்த சொத்துகளை மீண்டும் பெற மகாவிஷ்ணுக்கு சொல்ல வேண்டிய மந்திரம்..!

0

மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தவாறு இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பதால் பிறரின் வஞ்சகத்தால் நீங்கள் இழந்த சொத்துக்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

இழந்த சொத்துகளை மீண்டும் பெற மந்திரம்
ஸ்ரீமன் நாராயணனன் மந்திரம்

ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா

கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து
கூரேசர் அருளிய நாராயணாஷ்டகம்

வைகுண்டத்தில் வாசம் செய்யும் ஸ்ரீமன் நாராயணன் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பவர்களுக்கு மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். மாத ஏகாதசி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தவாறு இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பதால் பிறரின் வஞ்சகத்தால் நீங்கள் இழந்த சொத்துக்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். மனக்கவலைகள் மற்றும் நோய்கள் நீங்கும்.மனோதைரியம் உண்டாகும்.

மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா என்பதே இந்த மந்திரத்தின் பொதுவான பொருளாகும். ஸ்ரீமன் நாராயணனின் இந்த மந்திரத்தை துதிப்பதால் நமக்கு பல விதமான நன்மைகள் உண்டாகிறது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply