புத்திர பாக்கியம் வேண்டுவோர் கட்டாயம் ஒரு தடவை செல்ல வேண்டிய கோவில்..!

0

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ளது. ஈசனின் திருப்பெயர் புத்திரகாமேஸ்வரர், அம்பாள் பெரிய நாயகி. குழந்தை பாக்கியத்தை உடனே உறுதியாக தரும் தலம். தசரதனின் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின்படி தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, மகன்கள் பேறு பெற்ற தலம். இத்தலத்தில் வடக்காக ஓடும் செய்யாற்றில் நீராடி அடுத்து சித்தர் வடிவில் தவக்கோலத்தில், தனிச் சந்நதியில் உள்ள தசரத மகாராஜாவை வணங்கி, பின்பு படித்துறை விநாயகரை வணங்க வேண்டும். அரசுடன் வேம்பு இணைந்த மரத்தடியில் அநேக நாகர்கள் உள்ளனர்.

இவர்களை 108 முறை வலம் வர வேண்டும்.வில்வம், பவளமல்லி என இருதல விருட்சங்கள் உள்ள தலம். வலம் வந்து, 9 தலை கொண்ட நாகம் ஈசனுக்கு குடை பிடிக்கிறது. அதனையும் கண்டு பின்பு அம்பாள், ஈசன் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது கோயில் மரபு. இங்கு ஆனி மாத பௌர்ணமி அன்று நடக்கும் யாகத்தில் கலந்து கொண்டால் வேண்டிய வரம் பெறலாம். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply