ஜனாதிபதியை பசில் உட்பட பலர் அச்சுறுத்தும் நிலை.

0

மக்களின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினருக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் தீர்மானகரமான அழுத்தங்களை கொடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி தனது எகிப்து விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் உடனடியாக இந்த சந்திப்பு நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதில்லை என்பது ஜனாதிபதியின் நிலைப்படாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளுக்காக 12 பேர் அடங்கிய பட்டியலை ஜனாதிபதியிடம் வழங்கியிருந்தார்.

அந்த பட்டியலில் நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, சனத் நிஷாந்த போன்ற தற்போது மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளானவர்களின் பெயர்கள் இருந்தன.

Leave a Reply