மற்றுமொரு அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதன்பிரகாரம் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
இருப்பினும் அவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பதவியை தொடர்ந்தும் வகிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் புதிய வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.