பொதுமக்கள் வரிசையில் நிற்கவேண்டாம்- அமைச்சர் கோரிக்கை.

0

நாட்டில் டீசல் விநியோகத்தில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை.

இருப்பினும் பெட்ரோல் விநியோகத்தில் பிரச்சினை உள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்து வரும் மூன்று நாட்களில் பெட்ரோல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரையறைக்கு உட்பட்ட கையிருப்புகளே இருப்பதால், பொதுமக்கள் வரிசையில் நிற்கவேண்டாம் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை அளவிலேயே பெற்றோல் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று காஞ்சன விஜயசேகர குறிப்பிட்டார்.

பெற்றோல் விநியோகத்துக்காக வந்துள்ள கப்பலுக்கு டொலர் செலுத்தப்படாமையே இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே நோயாளர் அவசர வாகனங்கள் உட்பட்ட அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரமே பெட்ரோலை நிரப்பக்கூடிய நிலை உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் டீசல் கையிருப்பை பொறுத்தவரை இன்று மாலைக்குள் நாட்டில் உள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் தொகை அனுப்பப்பட்டு விடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply