தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 219 பேரில் ஐவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்.

0

அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் இடம்பெறும் அமைதியின்மை காரணத்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 219 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 219 பேரில் 05 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காவல்துறை உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

காலிமுகத்திடல் போராட்ட காலத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொழும்பு வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 230ஐ தாண்டியுள்ளது..

Leave a Reply