தனியார் தாங்கி ஊர்தி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

0

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக இன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்குமாறு சகல எரிபொருள் தாங்கி ஊர்தி சாதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணி புறக்கணிப்பு நிறைவடைந்ததை அடுத்து எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நேற்று இரவு முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள நீண்ட வரிசையை எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்க முடியும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் சில தினங்களில் பிழை திருத்தம் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply