இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு உதவி திட்டம்.

0

இலங்கையில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு சமூக உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவசரகால தேவைகள் நிதியத்தின் கீழ் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை மத்திய வங்கியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், உலக வங்கி அதற்காக முழுமையாக இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர்ன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply