இலங்கையிலுள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் மின் துண்டிப்பு காரணத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பிரகாரம் இன்று முதல் பாடசாலை விடுமுறை வழங்குமாறு பொது பயன்பாடு ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் தவணைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க முடியும் என்று கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏனைய மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்களாயின் அதற்கான அனுமதியை மாகாண கல்விப் பணிப்பாளராக ஊடாக பெற்றிருக்க வேண்டும் .
மேலும் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பணிக் குழாமினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.



