சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் தற்போது டொலர் பிரச்சினை காரணமாக பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



