வாகன இறக்குமதி தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பல தரப்பினரும் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர் எவ்வாறாயினும், அத்தியாவசிய பொருட்களை மட்டும் இறக்குமதி செய்வதற்கு டொலர்களை பயன்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் டொலர் நெருக்கடி தீர்ந்த பின்னரே வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.



