தற்போது நாட்டில் 25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் பத்து நாட்களில் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 114,000 மெட்ரிக் டன் டீசலும்,60,000 மெட்ரிக் டன் பெட்ரோலும் இரண்டு வாரங்களில் கிடைக்கப் பெறும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் 40,000 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 21 அல்லது 22 ஆம் திகதியில் நாட்டை வந்தடைந்தது.
மேலதிக ஏப்ரல் மாதம் முதல் வார காலப்பகுதியில் கிடைக்கப்பெறும் எனவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது என குறிப்பிட்டுள்ளார்.