முதலில் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் தோல்வியடைந்து விட்டார்.
அதனை மூடி மறைக்க தற்போது விளையாட்டு ஒன்றை ஆட முயற்சித்து வருகின்றனர் எனவும் அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் நேற்றைய தினம் அரசாங்கம் மேற்கொண்ட அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கருத்து வெளியிடும் போதேஅவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



