11 கட்சித் தலைவர்களுக்கு அவசர அழைப்பு.

0

11 கட்சித் தலைவர்களுக்கு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு வருமாறே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி (NFF) மற்றும் பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகள், அரசாங்கத்தில் நீடிப்பதா அல்லது சுயாதீனமாக செயற்படுவதா என்பதை கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்க வேண்டும் என பதவி நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Leave a Reply