எதிர்வரும் திங்கட்கிழமை பின்னர் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி ஏற்பட்ட மின் வெட்டு தொடர்பில் ஆராய்வதற்கான மக்கள் கருத்தறியும் நிகழ்வை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



