இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் உவ மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மேகலை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யும்.

அவ்வாறு காலி, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சிலவிடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply