எரிபொருள் இன்மையால் தொடர்ந்தும் செயலிழந்துள்ள மின் நிலையங்கள்.

0

எரிபொருள் இன்மையால் மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்ச்சியாக செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் கொழும்பு துறைமுக பத்தல மின்முனையம் உலை எண்ணைய் இன்மையால் , இன்று மதியத்துடன் செயலிழப்பதாக மின்சார சபை பேச்சாளர் அண்ட்ரூ நவமணி
குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது 165 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் களனி திஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மையம் மற்றும் 115 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் என்பன எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளன.

மேலும் மத்துக்கம மின்ற்பத்தி நிலையம், துல்கிரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் கெரவலப்பிட்டி மேற்கு முனைய மின் உற்பத்தி நிலையம் என்பனவும் எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளன.

Leave a Reply