எரிபொருள் தாங்கிய கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டீசல், பெற்றோல் மற்றும் விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தலா ஒவ்வொரு கப்பலிலும் 35,000 முதல் 40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை இது காலத்தில் நீக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் நிதி செலுத்தும் அடிப்படையில் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.



