நாடு பூராகவும் மின் துண்டிப்பு அமுல்படுத்தும் காலப்பகுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு ஏற்படுகின்றது.
அத்துடன் இலங்கை மின்சார சபைக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உயர்தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பு மேற்கொள்ளாது இருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.



