நாட்டில் நடைமுறைப்டுத்தபட்ட திட்டம்.

0

இலங்கையில் மீண்டும் கொரோனாத் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயம் மூன்று தடுப்பூசிகளும் ஏற்ற வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்தல் விடுத்தள்ளனர்.

அதுமட்டுமன்றி இது தொடர்பில் வர்த்தமானி மூலமான அறிவிப்பையும் அரசாங்கம் விடுத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி அட்டைகள் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பில் பல இடங்களிலும் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் தடுப்பூசி அட்டை பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன், மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாடுபூராகவும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply