எதிர்வரும் இருவாரங்களில் வேதனை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் நாட்களில் கடமையான தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்போம் என இலங்கை கல்வி நிர்வாக சேவையாளர் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும்.
அத்துடன் அதிபர்- ஆசிரியர்களின் வேதனை பிரச்சனைக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு அவர்களது பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டது.
மேலும் அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட்ட போதிலும் ஏனைய அரச சேவையாளர்களுக்கு வேதனை பிரச்சனை அதிகரித்துள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு தயாராக உள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவையாளர் தொழிற் சங்கத்தின் பொதுச்செயலாளர் நீல். எஸ். அத்துகோரல தெரிவித்துள்ளார்.



