மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் இணையத்தை பயன்படுத்தி கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தொலை காணொளி ஊடாக கற்பித்தல் மற்றும் கருத்தரங்குகளை நடத்தும் செயற்பாடுகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். டி தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் 22ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் நடைபெற உள்ளது.
இதன் பிரகாரம் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் உள்ளிட்ட சகல விடயங்களும் நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.



