மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணையில் 70சதவீதம் வாகனங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.
அத்துடன் மின் உற்பத்திக்காக 21 சதவீதமும், கைத் தொழில் துறைக்காக 4 சதவீதமும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கப்படும் போது, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அரச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.



