மகாராஷ்டிரா பா. ஜனதா சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவில் தனது டுவிட்டர் பக்கத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே பாந்தாரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மக்களிடையே பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வீடியோவில் நானா படோலே என்னால் மோடியை அடிக்க முடியும்.
அவரை வார்த்தைகளால் கேவலப்படுத்தவும் முடியும்.
இதனால் தான் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அவர் வந்தார் என ஆவேசமாக பேசியிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் தேவேந்திர பட்னாவில், பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி 20 நிமிடங்கள் சாலையில் சிக்கித்தவித்தார்.
அங்குள்ள காங்கிரஸ் முதல்-மந்திரி இந்த பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை.
தற்போது மராட்டிய காங்கிரஸ் தலைவர் அவரை அடிக்கவும் , கேவலப்படுத்தவும் முடியும் என துணிச்சலாக பேசுகின்றார்.
காங்கிரஸ் கட்சியில் தற்போது என்னதான் நடக்கின்றது.
ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி , இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டது.
மேலும் நானா படோலே உடல் ரீதியாக மட்டுமே வந்துள்ளார் என சரியாக வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் நானா படோலே தான் பிரதமர் மோடியை குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எனது சொந்த தொகுதியில் மோடி என்ற உள்ளூர் ரவுடி குறித்து மக்கள் என்னிடம் புகார் அளித்தனர்.
மேலும் மோடி என்ற அந்த உள்ளூர் ரவுடியை பற்றி தான் அந்த வீடியோவில் பேசினேன்.
பிரதமரை பற்றி அப்படி பேசவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.



