புதிய தெங்கு ஏற்றுமதி வலயம் அமைக்கப்படவுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பாத்திரன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகிலே இந்த புதிய தெங்கு ஏற்றுமதி வலயம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தெங்கு சார்ந்த உற்பத்திகளில் கிடைக்கப் பெறும் அதிக கேள்வி காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வருடம் தெங்கு ஏற்றுமதியால் மாத்திரம் 900 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைத்துள்ளது.
அவ்வாறு இறப்பர் ஏற்றுமதியின் மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக ஈட்டப்பட்டுள்ளது.



