கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்.

0

நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 16 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

அத்துடன் அவசர திருத்த பணிகள் காரணமாக நாளை மறுதினம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கொழும்பு, தெகிவளை, கல்கிஸ்ஸ , கோட்டே மற்றும் கடுவளை மாநகரசபை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இவற்றை விட மகரகம , பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் , கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நாளை மறுதினம் 16 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

Leave a Reply