பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கண்டறிவதற்கு புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த செயலியை தரவிறக்கம் செய்வதன் ஊடாக பொது இடங்களில் புகைப் பிடிப்பவர்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் தகவல் வழங்க முடியும்.
அத்துடன் எதிர்காலத்தில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக புகையிலை மற்றும் மின்சாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சாமதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



