தற்போது நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணத்தினால் கொழும்பு சிறப்பு அங்காடிகளில் விறகு மற்றும் மண் சட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிலவும் எரிவாயு வெடிப்பு தொடர்பு சம்பவத்தால் அநேகமான மக்கள் விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு காரணத்தால் மண்ணெண்ணெய் அடுப்புக்கான கேள்வி அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்ணெண்ணெய் அடுப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



