நாடு தழுவிய ரீதியில்
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த போராட்டம் யாழில் இன்றைய தினம் இடம்பெற்றது.
அத்துடன் இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் குறித்த போராடடத்தின் போது , சுகாதார துறையை அழிக்காதே, சுகாதார நிர்வாக சேவையை ஆரம்பி, விசேட கொடுப்பனவை உயர்த்து, பொது மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடு, பதவி உயர்வு முரண்பாட்டை தீர்த்து வை, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கு, போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



