வேலை வாய்ப்பை தேடும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

0

ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்குள் ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹெய்டயாகி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க ஜப்பான் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2022ஆம் ஆண்டில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியடைகிறது.

இதனை முன்னிட்டு கண்டியில் அமைந்துள்ள புனித தலதா மாளிகையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply