இலங்கையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

0

எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பணிப்புரையை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட காவல் அதிகாரிகளுக்கு,காவற்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன விடுத்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டத்தை தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக காவல் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்துடன் கத்தோலிக்க மதகுருக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்புத் திட்டத்தை வகுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உளவுத் தகவல்களை சேகரித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறும் காவல் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply