அலி சப்ரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

0

நீதி அமைச்சர் அலி சப்ரியை குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் அலி சப்ரி இருக்கும் வரையில் சஹரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே அவரை நீதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளரும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதியமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply