யாழில் பரவியுள்ள மர்ம காய்ச்சல்.

0

யாழ்.தென்மராட்சியில் நெருப்புக் காய்ச்சலுடன் சிலர் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய சாவகச்சோசுகாதார வைத்திய அதிகாரி பணிமனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன் பொதுவாக இந்த நோய் மோசமான சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரம் உள்ள நாடுகளில் காணப்படும்.

குறித்த காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை சுகாதாரத்துறையினரால் வெளியிடப்படட்டுள்ளது.

இந்நிலையில் நீங்கள் உள்ளெடுக்கும் நீர் மற்றும் உணவு என்பவற்றின் சுகாதாரத்தில் அதிகம் கவனம் செலுத்துங்கள்

கொதித்தாறிய அல்லது குளோறின் மூலம் பரிகரிப்பு செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்துங்கள்

அவ்வாறு பாதுகாப்பாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை கொள்வனவு செய்து உண்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

வீட்டில் உடனுக்குடன் சமைத்த உணவை உண்ணுங்கள்
சமைத்த உணவுகளை பாதுகாப்பாக மூடி வைத்துக் கொள்ளுங்கள்

சமைக்காது உண்ணும் பழங்கள், பச்சை இலை வகைகள் என்பவற்றை நன்கு கழுவி உண்ணுங்கள்

உணவு தயாரித்தல், பரிமாறல், மலசலகூட பாவனை ஆகியவற்றின் பின்னர் சவர்காரம் இட்டு கைகளை சுத்தம் செய்யுங்கள்

நோய் அறிகுறிகள் ஏற்படின் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்

இவற்றை அன்றாடம் பின்பற்றினால் குறித்த நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
00000000
07 அதிரடியாக இரத்து செய்யப்பட்டது; அரசாங்கம் விடுத்த அறிவிப்பு…!!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்படவிருந்த நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சந்திப்பில் , மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைச்சேறியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிக ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

எனினும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை அரசாங்கம் அதிரடியாக இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply