அடுத்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆயத்தமாகும் தொழிற்சங்கத்தினர்.

0

எதிர்வரும் திங்கட்கிழமை 5 மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய இடமாற்றம் பிரச்சனை சரணமாக குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய குழு உறுப்பினரும் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .

அத்துடன் இன்று பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், மன்னார், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply