கஞ்சாவை சட்டரீதியாக ஏற்றுமதி செய்வதால் இலங்கையில் கடனை அடைக்க முடியாது என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்குவதன் ஊடாக அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கையின் கடனை செலுத்த முடியாது.
இந்நிலையில் உலகளாவியரீதியில் கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபடும் பல நிறுவனங்கள் தற்போது 10 பில்லியன் அமெரிக்க டொலர் வரையில் இழப்புகளை சந்தித்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2019ஆம் ஆண்டு முதல் கஞ்சா எண்ணெய் விலையானது 75 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கஞ்சாவிற்கு கேள்வி குறைவாக இருப்பினும், உற்பத்தி அதிகமாக இருப்பதால் சர்வதேச அளவில் கஞ்சா வெண்ணெய் பொருட்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழலில் அதனை சட்டரீதியாக அங்கீகரிப்பதற்கு ச முயலுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு நாட்டில் இவ்வாறான ஒரு செய்கை இடம்பெறுமாயின் தேசிய சந்தைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவதற்கு வாய்ப்பு உள்ளது.



