வானிலை தொடர்பில் வெளியான முன் அறிவிப்பு.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கைக்கு தெற்காக காணப்படுகின்ற கீழ் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்கம் காரணத்தால் நாட்டின் தென் பகுதியில் பனி மூட்டமாக வானிலை நிலவும்.

அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும்.

குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply