ஒரு இளைஞனை நான்கு நபர்கள் கலைத்துக் கலைத்து வெட்டிய சம்பவம்.

0

யாழ் பரமேஸ்வரா சந்தி பகுதியில் இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று தூரத்தி வாளினால் வெட்டிய சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் முற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் யாழ் நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்த நான்கு நபர்கள் இளைஞனை பரமேஸ்வரா சந்தியில் வழிமறித்து கடுமையான வாளினால் வெட்டியுள்ளனர்.

கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து பல்கலைக்கழகம் பக்கமாக இளைஞன் தப்பி ஓடிய போதும் துரத்தித் துரத்தி வாளால் வெட்டப்பட்டுள்ளார்.

இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல் துறையினர் முனெடுத்து வருகின்றனர்.

Leave a Reply