மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் இதுவரை காலமும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 82, 408 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



