14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

0

நிலவும் மழையுடன் விட வானிலை காரணத்தால் 14 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப் பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், தெதுரு ஓயா நீர் தேக்கத்தின் 8 வான் கதவுகளும், லக்சபான நீர்த்தேக்கத்தின் 3 கதவுகளும் , தப்போவா நீர் தாக்கத்தின் இரண்டு வான் கதவுகளுமே இவ்வாறு திறக்கப்படடுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பொல்கொல்ல மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கங்களின் நான்கு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

நீளம் 6 அடி நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் பிரிவின் பணிப்பாளர் எஸ். பி. சி சுகிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply