விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஐந்தாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 3ஆம் திகதி தொடங்கப்பட்ட குறித்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள்.
இவற்றுள் நமிதா மாரிமுத்து என்கின்ற திருநங்கையும் இதில் கலந்துகொண்டார் என்பதுடன் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல் சந்தர்ப்பம்.
மேலும் ஒரு நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து , தான் கடந்து வந்த கஷ்டங்களை குறித்து பேசியது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
தற்பொழுது இவர் மக்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றார்.
இதனை பார்த்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.