பரிந்துரைக்கப்பட்டுள்ள கிண்ணியா கொரோனா மையவாடிக்கான மின்குமிழ்கள் அன்பளிப்பு செயப்படுள்ளன,
கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள கிண்ணியா வட்டமடு மையவாடிக்கு அத்தியாவசியமான தேவைப்பாடுகளில் ஒன்றாக காணப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான LED மின்குமிழ்கள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களால் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம். நிகாரிடம் நேற்று செவ்வாய்கிழமை மாலை கையளிக்கப்பட்டன.
குறித்த இந்த மின்குமிழ்களை பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று குடும்பங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஊடாக அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.



