அவசர கால ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்சன் பெர்னாண்டோவினால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று காலை 10,30 மணி அளவில் ஆரம்பமாகிய நிலையில் பிரேரணை மீதான வாக்கெடுப்பு 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



